கோவை விமான நிலையத்தில் ஓடுதள புனரமைப்பு பணி: டிசம்பர் மாதம் வரை அனைத்து இரவு நேர விமான சேவைகள் ரத்து

கோவை விமான நிலையத்தின் ஓடுதள புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், இந்த மாதம் தொடக்கப்படவிருந்த, கோவை - கோவா உள்ளிட்ட அனைத்து நள்ளிரவு விமான சேவைகளும் டிசம்பர் மாதம் இறுதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.


கோவை: பொதுவாக அனைத்து விமான நிலையங்களிலும் விமான ஓடுதளங்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனரமைக்கப்படுவது வழக்கம். இதேபோல், கோவை விமான நிலையத்தில் ஓடுதளங்கள் புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக கோவை விமான நிலையத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதி வரை இந்த இரவு நேர சேவைக்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, கோவை விமான நிலையத்தில் ஓடுதளம் புனரமைப்பு பணிகள் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்த மாதம் முதல் கோவை - கோவா உள்ளிட்ட நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சில விமான சேவை தொடங்க தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் திட்டமிட்டன. அறிவிப்புகள் வெளியிடப்பட்டு சில சேவைகளுக்கு டிக்கெட் முன்பதிவும் தொடங்கியது.

விமான நிலையத்தில் ஓடுதள புனரமைப்பு பணிகள் தொடரும் காரணத்தால், டிசம்பர் மாத இறுதி வரை நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் விமான சேவை வழங்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்.

திட்டமிட்டபடி பணிகள் முடிந்துவிட்டால் ஜனவரி முதல் கோவை விமான நிலையத்தில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களிலும் விமான சேவை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை - கோவா இடையே வரும் அக்டோபர் 30ஆம் தேதி முதல் நள்ளிரவு விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஓடுதள புனரமைப்பு பணிகள் காரணமாக 2 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...