கோவை மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி நடைபெற உள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
கோவை: வரும் அக்டோபர் 25ஆம் தேதி, கோவை மாநகர காவல்துறை சார்பில் ஊர்க்காவல் படையில் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகமாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், உத்தரவின்படி, கோவை மாநகர ஊர்காவல் படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப ஊர்காவல்படை தேர்வு நடத்தப்படவுள்ளது.
ஆகவே, ஊர்காவல் படையில் சேர்ந்து காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள், மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் 25.10.2022ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள், கோவை காந்திபுரம் சி-1 காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவை மாநகர ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்காக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் மற்றும் தேர்ச்சி பெறாதவர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு - 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பம் வழங்குமிடம் - கோவை மாநகர ஊர்காவல் படை அலுவலகம், கோவை காந்திபுரம் சி-1 காட்டூர் காவல் நிலைய வளாகம்.
மேலும் தொடர்புக்கு - 9498171293 , 99423-46806,9498172525.
இது குறித்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், உத்தரவின்படி, கோவை மாநகர ஊர்காவல் படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப ஊர்காவல்படை தேர்வு நடத்தப்படவுள்ளது.
ஆகவே, ஊர்காவல் படையில் சேர்ந்து காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள், மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் 25.10.2022ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள், கோவை காந்திபுரம் சி-1 காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவை மாநகர ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்காக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் மற்றும் தேர்ச்சி பெறாதவர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு - 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பம் வழங்குமிடம் - கோவை மாநகர ஊர்காவல் படை அலுவலகம், கோவை காந்திபுரம் சி-1 காட்டூர் காவல் நிலைய வளாகம்.
மேலும் தொடர்புக்கு - 9498171293 , 99423-46806,9498172525.