கோவை மாநகர ஊர்க்காவல் படையில் சேர வரும் அக்.25 ஆட்சேர்ப்பு முகாம் - இளைஞர்களுக்கு வாய்ப்பு..!

கோவை மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி நடைபெற உள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.


கோவை: வரும் அக்டோபர் 25ஆம் தேதி, கோவை மாநகர காவல்துறை சார்பில் ஊர்க்காவல் படையில் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகமாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், உத்தரவின்படி, கோவை மாநகர ஊர்காவல் படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப ஊர்காவல்படை தேர்வு நடத்தப்படவுள்ளது.

ஆகவே, ஊர்காவல் படையில் சேர்ந்து காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள், மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் 25.10.2022ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள், கோவை காந்திபுரம் சி-1 காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவை மாநகர ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்காக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் மற்றும் தேர்ச்சி பெறாதவர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு - 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் வழங்குமிடம் - கோவை மாநகர ஊர்காவல் படை அலுவலகம், கோவை காந்திபுரம் சி-1 காட்டூர் காவல் நிலைய வளாகம்.

மேலும் தொடர்புக்கு - 9498171293 , 99423-46806,9498172525.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...