கோவை சரவணம்பட்டி அருகே வாட்ஸ்அப்-பில் தவறான மெசேஜ் அனுப்பியதை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவர் மீது தாக்குதல் - 6 பேர் மீது வழக்கு.

சரவணம்பட்டி அருகேயுள்ள விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கு வாட்ஸ்ஆப்-பில் தவறான மெசேஜ் அனுப்பியது தொடர்பாக கேட்க சென்ற அவரை தாக்கிய 6 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: சரவணம்பட்டி அருகேயுள்ள விநாயகபுரம் அடுத்த கம்பன் வீதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் விக்ரம் (19). இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. (ஐ. டி).முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கு, முருகன் நகர் பகுதியை சேர்ந்த இறையன்பு என்பவர் வாட்ஸ் அப்பில் தவறான மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இறையன்புவிடம் கேட்பதற்காக கல்லூரி மாணவர் சென்றுள்ளார்.

அப்போது, இறையன்பு தனது நண்பர்களுடன் அங்கு நின்று கொண்டிருந்துள்ளார். இதுகுறித்து கேட்டதும் விக்ரமை, இறையன்பு மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில், படுகாயமடைந்த விக்ரம்சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சரவணம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில், கல்லூரி மாணவர் விக்ரமை தாக்கிய இறையன்பு மற்றும் அவரது நண்பர்கள் குட்டு என்ற ரித்திக், சேட்டு, சுருதிப், கார்த்திக். காளி உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவாகியுள்ள 6 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...