திருப்பூரில் நடைபெற்ற 48வது சர்வதேச பின்னலாடை கண்காட்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்

உலக நாடுகள் பொருளாதார சுணக்கம் அடைந்துள்ள நிலையில் ஆர்டர்கள் குறைந்தாலும் உலக நாடுகள் சீனாவுக்கு மாற்றாக ஆடை வர்த்தகத்தை இந்தியாவில் மேற்கொள்ளவே விரும்புகின்றன ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல்.


கோவை: திருப்பூர் பின்னலாடை துறையின் நூல் விலை மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக ஆர்டர்கள் இன்றி தவித்து வரும் நிலையில் ஆர்டர்களை மீண்டும் கவரும் வகையில் இந்த பின்னலாடை கண்காட்சி நடத்தப்படுகிறது.

இந்த பின்னலாடை கண்காட்சியை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், இந்திய பின்னலாடை கண்காட்சி அமைப்பு மற்றும் ஏற்றுமதி வர்த்தக ஏஜென்சி இணைந்து நடத்துகிறது.

48வது சர்வதேச பின்னலாடை கண்காட்சியான இந்நிகழ்வு திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பழங்கரையில் உள்ள நிட்பேர் வளாகத்தில் நடைபெறுகிறது.

திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முன்னணி ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் ஆடைகளை காட்சிபடுத்தினர்.

66 அரங்குகளுடன் 3 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை காண அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட இறக்குமதியாளர்கள் வர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கண்காட்சியை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.



பின்னர் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆடைகளை பார்வையிட்டு ஆடைகளின் சிறப்பு குறித்து கேட்டறிந்தார்.



இக்கண்காட்சியில் பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட இழையால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் அதிக அளவில் காட்சிப்படுத்தப்பட்டது.

மூலப்பொருட்கள் விலை உயர்வு, ரஷ்யா உக்ரைன் போர் என பல்வேறு காரணங்களால் உலக நாடுகள் பொருளாதார சுணக்கம் அடைந்துள்ள நிலையில் ஆர்டர்கள் குறைந்தாலும் உலக நாடுகள் சீனாவுக்கு மாற்றாக ஆடை வர்த்தகத்தை இந்தியாவில் மேற்கொள்ள விரும்புகின்றன. இதனால் வரும் நாட்களில் பின்னலாடை வர்த்தகம் பெருகும் என்பதால் உற்பத்தியாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...