திருப்பூரில் நடைபெற்ற 48வது சர்வதேச பின்னலாடை கண்காட்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்

உலக நாடுகள் பொருளாதார சுணக்கம் அடைந்துள்ள நிலையில் ஆர்டர்கள் குறைந்தாலும் உலக நாடுகள் சீனாவுக்கு மாற்றாக ஆடை வர்த்தகத்தை இந்தியாவில் மேற்கொள்ளவே விரும்புகின்றன ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல்.


கோவை: திருப்பூர் பின்னலாடை துறையின் நூல் விலை மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக ஆர்டர்கள் இன்றி தவித்து வரும் நிலையில் ஆர்டர்களை மீண்டும் கவரும் வகையில் இந்த பின்னலாடை கண்காட்சி நடத்தப்படுகிறது.

இந்த பின்னலாடை கண்காட்சியை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், இந்திய பின்னலாடை கண்காட்சி அமைப்பு மற்றும் ஏற்றுமதி வர்த்தக ஏஜென்சி இணைந்து நடத்துகிறது.

48வது சர்வதேச பின்னலாடை கண்காட்சியான இந்நிகழ்வு திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பழங்கரையில் உள்ள நிட்பேர் வளாகத்தில் நடைபெறுகிறது.

திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முன்னணி ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் ஆடைகளை காட்சிபடுத்தினர்.

66 அரங்குகளுடன் 3 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை காண அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட இறக்குமதியாளர்கள் வர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கண்காட்சியை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.



பின்னர் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆடைகளை பார்வையிட்டு ஆடைகளின் சிறப்பு குறித்து கேட்டறிந்தார்.



இக்கண்காட்சியில் பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட இழையால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் அதிக அளவில் காட்சிப்படுத்தப்பட்டது.

மூலப்பொருட்கள் விலை உயர்வு, ரஷ்யா உக்ரைன் போர் என பல்வேறு காரணங்களால் உலக நாடுகள் பொருளாதார சுணக்கம் அடைந்துள்ள நிலையில் ஆர்டர்கள் குறைந்தாலும் உலக நாடுகள் சீனாவுக்கு மாற்றாக ஆடை வர்த்தகத்தை இந்தியாவில் மேற்கொள்ள விரும்புகின்றன. இதனால் வரும் நாட்களில் பின்னலாடை வர்த்தகம் பெருகும் என்பதால் உற்பத்தியாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...