வால்பாறையில் நடைபெற்ற அஞ்சலக வார விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம், டிஜிட்டல் திட்டம் போன்ற திட்டங்களை பொதுமக்களுக்கு தெரியபடுத்தும் வண்ணம் ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கோவை: வால்பாறை பகுதியில் தேசிய அஞ்சலக வார விழா 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தேசிய வார விழா நடைபெறும். இதை முன்னிட்டு வால்பாறை துணை அஞ்சலகம் சார்பாக தேசிய அஞ்சலக வார விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி அஞ்சலகப் பகுதியில் துவங்கி காந்தி சிலை பகுதி வரை சென்று மீண்டும் அஞ்சலகம் வரை விழிப்புணர்வு பேரணியாக நடைபெற்றது.

அஞ்சல் துறையில் திறமிகு திட்டங்களான அஞ்சல் சேமிப்பு திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் பென்ஷன் சேமிப்பு திட்டம், முதியோர் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம், டிஜிட்டல் திட்டம் போன்றவற்றை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இந்நிகழ்வில் பொள்ளாச்சி தெற்கு கோட்டயம் ஆய்வாளர் ஆலோக் சிங் யாதவ் வால்பாறை துணை அஞ்சலகம் கண்காணிப்பாளர் ஜே ஜெயசீலன் மற்றும் துணை அஞ்சலகம் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி அஞ்சலகப் பகுதியில் துவங்கி காந்தி சிலை பகுதி வரை சென்று மீண்டும் அஞ்சலகம் வரை விழிப்புணர்வு பேரணியாக நடைபெற்றது.
அஞ்சல் துறையில் திறமிகு திட்டங்களான அஞ்சல் சேமிப்பு திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் பென்ஷன் சேமிப்பு திட்டம், முதியோர் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம், டிஜிட்டல் திட்டம் போன்றவற்றை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இந்நிகழ்வில் பொள்ளாச்சி தெற்கு கோட்டயம் ஆய்வாளர் ஆலோக் சிங் யாதவ் வால்பாறை துணை அஞ்சலகம் கண்காணிப்பாளர் ஜே ஜெயசீலன் மற்றும் துணை அஞ்சலகம் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.