சுல்தான்பேட்டை பூராண்டம் பாளையத்தைச் சேர்ந்த ராஜாமணி (65) உடல்நிலை குறைவால் காலை உயிரிழந்த நிலையில், அவரது கணவர் திருமலைசாமி (85) அவர் இறந்த 3 மணி நேரத்தில் துக்கம் தாங்காமல் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை சுல்தான்பேட்டை பூராண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் திருமலைசாமி (வயது 80). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ராஜாமணி ( வயது 65).
நேற்று உடல்நலக்குறைவால் ராஜாமணி காலை 10:30 மணிக்கு அவரது வீட்டில் உயிரிழந்தார். இதனால், திருமலைசாமி, மிகுந்த வேதனையுடன் காணப்பட்டார்.
அவரது மனைவியின் உடல் அருகே ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த திருமலைசாமி, காலை முதல் தேம்பி தேம்பி அழுதபடி இருந்துள்ளார்.
பின்னர், திடீரென மயங்கி இருக்கையில் சாய்ந்தவாறு உயிரிழந்தார். ஒரே நாளில் 3 மணி நேரத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்த துயர சம்பவம் குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக தான் செல்வார்கள். வியாபாரம் செய்யும் நேரம் தவிர மனைவியை விட்டு பிரியாமல் இருப்பார். இப்போது, இறுதி பயணத்திலும் இணைபிரியாத தம்பதிகளாக ஒன்றாக சென்று விட்டனர் என்று கண்ணீர் மல்க அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
இணைபிரியாத இந்த தம்பதிகளின் உடல் ஒன்றாக வைக்கப்பட்டு, இறுதி அஞ்சலி சடங்குகள் செய்யப்பட்டது.அப்பகுதி மக்கள் அனைவரும் தம்பதியின் உடல்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், பூராண்டம்பாளையம் இடுகாட்டில் ஒரே மேடையில் இருவரது உடலும் வைக்கப்பட்டு அவர்களது மகன்கள் சிவக்குமார், பாலகுமார் தகனம் செய்தனர்.
இணை பிரியா தம்பதிகள் இறப்பிலும் இணை பிரியாது இமை மூடி இறுதிவரை தங்கள் பிணைப்பை பறைசாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை சொல்லில் அடங்கா துயரத்தில் ஆழ்த்தியது.
நேற்று உடல்நலக்குறைவால் ராஜாமணி காலை 10:30 மணிக்கு அவரது வீட்டில் உயிரிழந்தார். இதனால், திருமலைசாமி, மிகுந்த வேதனையுடன் காணப்பட்டார்.
அவரது மனைவியின் உடல் அருகே ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த திருமலைசாமி, காலை முதல் தேம்பி தேம்பி அழுதபடி இருந்துள்ளார்.
பின்னர், திடீரென மயங்கி இருக்கையில் சாய்ந்தவாறு உயிரிழந்தார். ஒரே நாளில் 3 மணி நேரத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்த துயர சம்பவம் குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக தான் செல்வார்கள். வியாபாரம் செய்யும் நேரம் தவிர மனைவியை விட்டு பிரியாமல் இருப்பார். இப்போது, இறுதி பயணத்திலும் இணைபிரியாத தம்பதிகளாக ஒன்றாக சென்று விட்டனர் என்று கண்ணீர் மல்க அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
இணைபிரியாத இந்த தம்பதிகளின் உடல் ஒன்றாக வைக்கப்பட்டு, இறுதி அஞ்சலி சடங்குகள் செய்யப்பட்டது.அப்பகுதி மக்கள் அனைவரும் தம்பதியின் உடல்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், பூராண்டம்பாளையம் இடுகாட்டில் ஒரே மேடையில் இருவரது உடலும் வைக்கப்பட்டு அவர்களது மகன்கள் சிவக்குமார், பாலகுமார் தகனம் செய்தனர்.
இணை பிரியா தம்பதிகள் இறப்பிலும் இணை பிரியாது இமை மூடி இறுதிவரை தங்கள் பிணைப்பை பறைசாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை சொல்லில் அடங்கா துயரத்தில் ஆழ்த்தியது.