கோவையில் இறப்பிலும் இணை பிரியாமல் இமை மூடிய தம்பதிகள்; ஒரே மேடையில் தகனம்.

சுல்தான்பேட்டை பூராண்டம் பாளையத்தைச் சேர்ந்த ராஜாமணி (65) உடல்நிலை குறைவால் காலை உயிரிழந்த நிலையில், அவரது கணவர் திருமலைசாமி (85) அவர் இறந்த 3 மணி நேரத்தில் துக்கம் தாங்காமல் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சுல்தான்பேட்டை பூராண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் திருமலைசாமி (வயது 80). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ராஜாமணி ( வயது 65).

நேற்று உடல்நலக்குறைவால் ராஜாமணி காலை 10:30 மணிக்கு அவரது வீட்டில் உயிரிழந்தார். இதனால், திருமலைசாமி, மிகுந்த வேதனையுடன் காணப்பட்டார்.

அவரது மனைவியின் உடல் அருகே ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த திருமலைசாமி, காலை முதல் தேம்பி தேம்பி அழுதபடி இருந்துள்ளார்.

பின்னர், திடீரென மயங்கி இருக்கையில் சாய்ந்தவாறு உயிரிழந்தார். ஒரே நாளில் 3 மணி நேரத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்த துயர சம்பவம் குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக தான் செல்வார்கள். வியாபாரம் செய்யும் நேரம் தவிர மனைவியை விட்டு பிரியாமல் இருப்பார். இப்போது, இறுதி பயணத்திலும் இணைபிரியாத தம்பதிகளாக ஒன்றாக சென்று விட்டனர் என்று கண்ணீர் மல்க அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.

இணைபிரியாத இந்த தம்பதிகளின் உடல் ஒன்றாக வைக்கப்பட்டு, இறுதி அஞ்சலி சடங்குகள் செய்யப்பட்டது.அப்பகுதி மக்கள் அனைவரும் தம்பதியின் உடல்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பூராண்டம்பாளையம் இடுகாட்டில் ஒரே மேடையில் இருவரது உடலும் வைக்கப்பட்டு அவர்களது மகன்கள் சிவக்குமார், பாலகுமார் தகனம் செய்தனர்.

இணை பிரியா தம்பதிகள் இறப்பிலும் இணை பிரியாது இமை மூடி இறுதிவரை தங்கள் பிணைப்பை பறைசாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை சொல்லில் அடங்கா துயரத்தில் ஆழ்த்தியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...