ஆர் எஸ் புரம் பகுதியில் தீபாவளி போனஸ் கேட்டு கொடுக்காததால் கடையின் முன்பு துப்புரவு பணியாளர் ஒருவர் குப்பைகளை கொட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை: கோவை ஆர்.எஸ். புரம் ராமச்சந்திரா ரோட்டில் உள்ள தனியார் எல்.இ.டி கடை நடத்தி வருபவர் ஜேம்ஸ். இவரிடம், சுகாதார பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, ஜேம்ஸ் 20 ஆம் தேதிக்கு மேல் வாங்க தருகிறேன் என அந்த தூய்மை பணியாளரிடம் கூறியுள்ளார்.
ஆனால், அதன் பின்னரும், அந்த தூய்மை பணியாளர் தொடர்ந்து ரூ. 500 கேட்டு தொந்தரவு செய்யவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி சுகாதார பணியாளர் ஒருவர் கடை அருகே இருந்த குப்பையை எடுத்து,கடை முன்பு போடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் பணம் கொடுக்காத கடை மற்றும் வீடுகள் முன்பு, சுகாதார பணியாளர் சிலர்குப்பைகளைகொட்டிவிட்டு செல்வது வாடிக்கையாகி விட்டது என்று வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தனியார் நிர்வாகங்களிடம் வலுக்கட்டாயமாக போனஸ் கேட்கும் ஒரு சிலதூய்மை பணியாளர்களால், அனைத்துதூய்மை பணியாளர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவதால், தவறு செய்பவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரிக்கை வலுத்துள்ளது.
அப்போது, ஜேம்ஸ் 20 ஆம் தேதிக்கு மேல் வாங்க தருகிறேன் என அந்த தூய்மை பணியாளரிடம் கூறியுள்ளார்.
ஆனால், அதன் பின்னரும், அந்த தூய்மை பணியாளர் தொடர்ந்து ரூ. 500 கேட்டு தொந்தரவு செய்யவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி சுகாதார பணியாளர் ஒருவர் கடை அருகே இருந்த குப்பையை எடுத்து,கடை முன்பு போடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் பணம் கொடுக்காத கடை மற்றும் வீடுகள் முன்பு, சுகாதார பணியாளர் சிலர்குப்பைகளைகொட்டிவிட்டு செல்வது வாடிக்கையாகி விட்டது என்று வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தனியார் நிர்வாகங்களிடம் வலுக்கட்டாயமாக போனஸ் கேட்கும் ஒரு சிலதூய்மை பணியாளர்களால், அனைத்துதூய்மை பணியாளர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவதால், தவறு செய்பவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரிக்கை வலுத்துள்ளது.