கோவையில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களில் விற்று வந்த மூவரை வடவள்ளி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்றை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடவள்ளி பகுதியில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த வட மாநிலத்தை சேர்ந்த மூவரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் குமார்தாஸ் (56) பிகாஸ் நாயக் (29) மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரிபுல் அலி (25) என்பது தெரியவந்தது.

மேலும், அவர்களிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் கோவை புறநகர் பகுதியில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களை குறி வைத்து சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சாவை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், வடவள்ளி பகுதியில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த வட மாநிலத்தை சேர்ந்த மூவரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் குமார்தாஸ் (56) பிகாஸ் நாயக் (29) மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரிபுல் அலி (25) என்பது தெரியவந்தது.
மேலும், அவர்களிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் கோவை புறநகர் பகுதியில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களை குறி வைத்து சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சாவை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.