கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற வட மாநிலத்தை சேர்ந்த மூன்று பேர் கைது - 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்…!

கோவையில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களில் விற்று வந்த மூவரை வடவள்ளி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்றை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடவள்ளி பகுதியில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த வட மாநிலத்தை சேர்ந்த மூவரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் குமார்தாஸ் (56) பிகாஸ் நாயக் (29) மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரிபுல் அலி (25) என்பது தெரியவந்தது.



மேலும், அவர்களிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் கோவை புறநகர் பகுதியில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களை குறி வைத்து சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சாவை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...