வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு அரசு பேருந்து வராததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

வால்பாறை எஸ்டேட் பகுதிகளான ஊசிமலை உள்ளிட்ட இடங்களுக்கு இன்று அரசு பேருந்து இயக்கப்படாததால் பொதுமக்கள் காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறை எஸ்டேட் பகுதிகளான ஊசிமலை, ஊசிமலை டாப், வெள்ளமலை டாப், ஆகிய பகுதிகளில் இன்று மாலையில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

அரசு பேருந்துகள் வராததால் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் இது குறித்து பேருந்து அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர்.



பேருந்துகள் வரும் என்ற நம்பிக்கையில் பல மணி நேரம் காத்திருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு கட்டத்திற்கு மேலாக பொறுமை இழந்த மக்கள் காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது மக்களின் போராட்டத்தை அறிந்து அப்பகுதிக்கு வந்த நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மணிகண்டன் மற்றும் வீரமணி ஆகியோரும் பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனால் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர், கற்பகம் தலைமையிலான காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் அரசு பேருந்து டிப்போ மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று பேருந்து ஏற்பாடு செய்தனர்.

மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவர்களது போராட்டத்தை கைவிட்டனர். மக்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் வால்பாறை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...