ஜவுளித்துறையை மேம்படுத்தும் வகையிலான பின்னலாடை கண்காட்சி டிசம்பர் 8ம் தேதி தொடக்கம் - திருப்பூரில் ஐ.டி.எம்.இ பொருளாளர் கேதன் சங்வி

‘இந்தியா ஐ.டி.எம்.இ.,–2022‘ என்ற பெயரில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வரும் டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கி 6 நாட்கள் நடைபெறவுள்ள ஜவுளித்துறை கண்காட்சியின் மூலம் வர்த்தக வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முடியும் என தகவல்.


திருப்பூர்: ஜவுளித்துறையை மேம்படுத்தும் வகையில் இந்தியா ஐ.டி.எம்.இ., சொசைட்டி சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். 2016க்கு பிறகு 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய கண்காட்சியானது கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், கொரோனா தளர்வுகள் முழுமையாக அமலுக்கு வந்த நிலையில், 11வது கண்காட்சியாக ‘இந்தியா ஐ.டி.எம்.இ.,2022‘ கண்காட்சி, உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில், வரும் டிசம்பர் 8ஆம் தேதி துவங்கி 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில், இந்திய ஜவுளி மற்றும் ஜவுளி இயந்திர வர்த்தகத்தின் திருப்பு முனையாக அமையும் என தொழில்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து, திருப்பூரில் இந்தியா ஐ.டி.எம்.இ., நிறுவன பொருளாளர் கேதன் சங்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியாவில் 2.35 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பிரமாண்டமான கண்காட்சி மிகுந்த எழுச்சியுடன் நடைபெறவுள்ளது.

ஜவுளி மற்றும் ஜவுளி இயந்திரங்களை காட்சிப்படுத்த, 22 பிரிவுகளாக, 1,100 ஸ்டால்கள் அமைய உள்ளன. உலகின் மிகப்பெரிய ஜவுளி கேந்திரமாக உள்ள இந்தியாவில், நடக்கும் கண்காட்சி, சர்வதேச அளவில் புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்கும். அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரான இயந்திரங்கள், ஜவுளித்துறையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும்.

கண்காட்சியில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பெல்ஜியம், பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 110க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

‘இந்தியா ஐ.டி.எம்.இ.,–2022‘ கண்காட்சி, நார்ப்பொருள், ஜவுளி உற்பத்தி தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு நடக்க உள்ளது. சர்வதேச சந்தைகளில் இருந்து, ஒரு லட்சத்து 50 ஆயிரம் பார்வையாளர்களும் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மத்தியில், இந்த கண்காட்சி பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி அமையும். சர்வதேச அளவில் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் நிறுவனங்கள் மற்றும் பொருளாதார நிறுவனங்களுக்கு இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன.

திருப்பூர், கோவை ஈரோடு, சேலம், மதுரை, உட்பட, பல்வேறு மாவட்ட மற்றும் மாநில தொழில்துறையினருக்கு கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் வர்த்தக வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...