உலக பெண் குழந்தைககள் தினமாக அக்டோபர் 11ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி என்ன?

கடந்த 1995ஆம் ஆண்டு அக்டோபர் 10-ல் இளம்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பெய்ஜிங்கில் நடைபெற்ற மாநாட்டின் விளைவாக, ஐ.நா சபையில் கனடா சார்பில் முன்மொழியப்பட்டு, இந்த நாள் உலக பெண் குழந்தைககள் தினமாக ஏற்கப்பட்டது.


இன்று உலக பெண் குழந்தைகள் தினம். உலகெங்கிலும் உள்ள இளம்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தைக் கண்டறிந்து 1995ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் உலக மாநாடு ஓன்று சர்வதேச அளவில் நடைபெற்றது.

இது உலக அளவில் பெண்களுக்கென நிகழ்ந்த முதல் மாநாடு ஆகும். அந்த மாநாட்டில் தான் அக்டோபர் 11ம் தேதி உலக பெண்கள் தினமாக அறிவிக்கப்பட வேண்டும் என முதல் முதலில் வலியுறுத்தப்பட்டது.

பின்னர் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்த நாளை தீர்மானமாக நிறைவேற்ற கனடா நாட்டின் சார்பில் முறையாக முன்மொழியப்பட்டது. இதன் விளைவாக, டிசம்பர் 19, 2011 அன்று, ஐ.நா. பொதுச் சபை அக்டோபர் 11, 2012ஐ சர்வதேச பெண் குழந்தை தினத்தின் தொடக்க நாளாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டது.

இந்த நாளில், பெண் குழந்தைகள் குறித்து சமூகத்தில் இருக்கும் பிற்போக்கு எண்ணங்களை போக்கி, ஆரோக்கியமான சமூக மாற்றத்தை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் மற்றும் முழுச் சுதந்திரம் கிடைக்க, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதே நேரத்தில், பெண் குழந்தைகள் ஒவ்வொருவரையும் இந்நாளில் வாழ்த்தி, கவுரவிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் மூலம் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கான சம உரிமையை வழங்க வேண்டும். பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், அவர்களுக்கு நேரும் பிரச்சினைகளைத் தடுத்தல் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை முன்னிறுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாக எடுக்கப்படுகிறது.

பெண்களின் சம உரிமை மற்றும் முன்னேற்றத்திற்காக உலக அளவில் இன்றும் போராட்டங்களும், முயற்சிகளும் நடந்து வருகின்றன. பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்பதை குடும்பத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் அனைத்து விதங்களிலும் சமமாக நடத்த வேண்டும். என்பது போன்றான உறுதிகளை நாம் எடுப்போம்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...