சூலூர் அருகே வாகன சோதனையின் போது, காரில் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 130 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்தனர்.
கோவை: கோவையில் குட்கா உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் புழக்கத்தை அடியோடு ஒழிக்க, மாநகர மற்றும் காவல் துறையினர் ரோந்து உள்ளிட்ட தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சூலூர் பகுதிகளில் போலிசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக TN37DJ3708 என்ற பதிவு எண் கொண்ட கார் ஒன்று வந்துள்ளது.
அப்போது, காரில் சோதனை செய்த போது, காருக்குள் மூட்டை ஒன்றை பதுக்கி வைத்திருப்பதை பார்த்த போலீசார் சந்தேகமடைந்து, மூட்டைகளை அவிழ்த்து பார்த்துள்ளனர். அப்போது, அந்த மூட்டையில் செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, காரை ஓட்டிவந்த பள்ளபாளையத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரது கார் மற்றும் அதில் இருந்த 130 கிலோ அளவிலான குட்காவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போதைப் பொருளில்லா மாவட்டமாக கோவையை மாற்ற பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்பதால், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து ஏதேனும் விவரம் தெரிந்தால் பொதுமக்கள் தயங்காமல் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் காக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
தகவல் தெரிவிக்க, கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 94981-81212 என்ற தொலை பேசி எண் மூலமாகவோ அல்லது 77081- 00100 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப் மூலமாகவும் பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்கலாம்.
இந்நிலையில், சூலூர் பகுதிகளில் போலிசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக TN37DJ3708 என்ற பதிவு எண் கொண்ட கார் ஒன்று வந்துள்ளது.
அப்போது, காரில் சோதனை செய்த போது, காருக்குள் மூட்டை ஒன்றை பதுக்கி வைத்திருப்பதை பார்த்த போலீசார் சந்தேகமடைந்து, மூட்டைகளை அவிழ்த்து பார்த்துள்ளனர். அப்போது, அந்த மூட்டையில் செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, காரை ஓட்டிவந்த பள்ளபாளையத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரது கார் மற்றும் அதில் இருந்த 130 கிலோ அளவிலான குட்காவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போதைப் பொருளில்லா மாவட்டமாக கோவையை மாற்ற பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்பதால், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து ஏதேனும் விவரம் தெரிந்தால் பொதுமக்கள் தயங்காமல் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் காக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
தகவல் தெரிவிக்க, கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 94981-81212 என்ற தொலை பேசி எண் மூலமாகவோ அல்லது 77081- 00100 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப் மூலமாகவும் பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்கலாம்.