கோவை சூலூர் அருகே காரில் 130 கிலோ குட்காவை விற்பனைக்காக கடத்திச் சென்ற நபர் கைது

சூலூர் அருகே வாகன சோதனையின் போது, காரில் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 130 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்தனர்.


கோவை: கோவையில் குட்கா உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் புழக்கத்தை அடியோடு ஒழிக்க, மாநகர மற்றும் காவல் துறையினர் ரோந்து உள்ளிட்ட தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சூலூர் பகுதிகளில் போலிசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக TN37DJ3708 என்ற பதிவு எண் கொண்ட கார் ஒன்று வந்துள்ளது.

அப்போது, காரில் சோதனை செய்த போது, காருக்குள் மூட்டை ஒன்றை பதுக்கி வைத்திருப்பதை பார்த்த போலீசார் சந்தேகமடைந்து, மூட்டைகளை அவிழ்த்து பார்த்துள்ளனர். அப்போது, அந்த மூட்டையில் செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, காரை ஓட்டிவந்த பள்ளபாளையத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரது கார் மற்றும் அதில் இருந்த 130 கிலோ அளவிலான குட்காவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போதைப் பொருளில்லா மாவட்டமாக கோவையை மாற்ற பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்பதால், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து ஏதேனும் விவரம் தெரிந்தால் பொதுமக்கள் தயங்காமல் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் காக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

தகவல் தெரிவிக்க, கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 94981-81212 என்ற தொலை பேசி எண் மூலமாகவோ அல்லது 77081- 00100 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப் மூலமாகவும் பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்கலாம்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...