கிணத்துக்கடவு அருகே கத்தியை காட்டி பணம் பறித்த டிரைவர் கைது

கோவில்பாளையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த நபரிடம், ரூபாய் 500 பணத்தை கத்தி முனையில் மிரட்டி பறித்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டிரைவர் கிருஷ்ணகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகேயுள்ள கோவில்பாளையத்தில் மொபைல் கடை நடத்தி வருபவர் ராம்குமார். இவர் கடந்த 8ம் தேதி வழக்கம் போல் இரவு தனது மொபைல் கடையில் இருக்கும் போது அங்கு வந்த எஸ். மேட்டுப்பாளையம் பகுதி சேர்ந்த டிரைவரான கிருஷ்ணகுமார் ராம்குமாரிடம் மது குடிக்க 500 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.

பணம் தர மறுத்த ராம்குமாரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்த ராம்குமார் 500 ரூபாய் பணத்தை கிருஷ்ணகுமாரிடம் வழங்கியுள்ளார்.

இதனால் மனவேதனையடைந்த ராம்குமார் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நேற்றிரவு புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த கிருஷ்ணகுமார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...