கோவில்பாளையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த நபரிடம், ரூபாய் 500 பணத்தை கத்தி முனையில் மிரட்டி பறித்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டிரைவர் கிருஷ்ணகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகேயுள்ள கோவில்பாளையத்தில் மொபைல் கடை நடத்தி வருபவர் ராம்குமார். இவர் கடந்த 8ம் தேதி வழக்கம் போல் இரவு தனது மொபைல் கடையில் இருக்கும் போது அங்கு வந்த எஸ். மேட்டுப்பாளையம் பகுதி சேர்ந்த டிரைவரான கிருஷ்ணகுமார் ராம்குமாரிடம் மது குடிக்க 500 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
பணம் தர மறுத்த ராம்குமாரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்த ராம்குமார் 500 ரூபாய் பணத்தை கிருஷ்ணகுமாரிடம் வழங்கியுள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த ராம்குமார் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நேற்றிரவு புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த கிருஷ்ணகுமார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பணம் தர மறுத்த ராம்குமாரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்த ராம்குமார் 500 ரூபாய் பணத்தை கிருஷ்ணகுமாரிடம் வழங்கியுள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த ராம்குமார் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நேற்றிரவு புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த கிருஷ்ணகுமார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.