அக்டோபர் 7ஆம் தேதி பரம்பிகுளம் - ஆழியாறு திட்ட தினத்திற்காக அணையின் மதகுகளை சிறுவனை வைத்து திறந்ததாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வரும் நிலையில், துறை அதிகாரிகள் விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளனது.
கோவை: பரம்பிகுளம்-ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான ஆழியாறு அணையில் இருந்து சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், கேரளாவிற்கு 7.25 டிஎம்சி தண்ணீர் ஒப்பந்தப்படி வழங்கப்படுகிறது.
பிஏபி திட்டத்தை நினைவு கூறும் வகையில் கடந்த 7ஆம் தேதி பிஏபி தினம் கொண்டாடப்பட்டது. 7ஆம் தேதி பிஏபி திட்டத்தில் உள்ள ஆழியாறு அணை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி இரவு ஆழியாறு அணையில் பணிபுரியும் ஊழியர், சிறுவன் ஒருவரை வைத்து மதகுகளை இயக்கியதாக தகவல்கள் பரவின.
அணையின் மதகுகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றி மீண்டும் மூடும் பொழுது பழுதடைந்தது என்றும், இந்நிலையில், மதகுகளை சிறிது நேரம் மூட முடியாத நிலை ஏற்பட்டது என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் அணையின் மதகு பழுது சரிசெய்யப்பட்ட பிறகே மதகுகள் மூடப்பட்டதாகவும், இது தொடர்பான புகைப்படமும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிஏபி திட்டத்தை நினைவு கூறும் வகையில் கடந்த 7ஆம் தேதி பிஏபி தினம் கொண்டாடப்பட்டது. 7ஆம் தேதி பிஏபி திட்டத்தில் உள்ள ஆழியாறு அணை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி இரவு ஆழியாறு அணையில் பணிபுரியும் ஊழியர், சிறுவன் ஒருவரை வைத்து மதகுகளை இயக்கியதாக தகவல்கள் பரவின.
அணையின் மதகுகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றி மீண்டும் மூடும் பொழுது பழுதடைந்தது என்றும், இந்நிலையில், மதகுகளை சிறிது நேரம் மூட முடியாத நிலை ஏற்பட்டது என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் அணையின் மதகு பழுது சரிசெய்யப்பட்ட பிறகே மதகுகள் மூடப்பட்டதாகவும், இது தொடர்பான புகைப்படமும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.