கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பாஜக தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் முரளி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
கோவை: கோவை மாவட்டம் முழுவதும் பாஜக சார்பில் அந்தந்த ஒன்றிய பகுதிகளில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிணத்துக்கடவு மேற்கு ஓன்றிய பாஜக சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
மேற்கு ஒன்றிய தலைவர் மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் முரளி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது, அனைத்து கிளைகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்,
வரும் தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாக பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை பாஜக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபால், மகேந்திர பிரபு, பொருளாளர் சிவகுமார், முன்னாள் ஒன்றிய தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிணத்துக்கடவு மேற்கு ஓன்றிய பாஜக சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
மேற்கு ஒன்றிய தலைவர் மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் முரளி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது, அனைத்து கிளைகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்,
வரும் தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாக பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை பாஜக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபால், மகேந்திர பிரபு, பொருளாளர் சிவகுமார், முன்னாள் ஒன்றிய தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.