கிணத்துக்கடவில் மேற்கு ஒன்றிய பாஜக ஆய்வுக்கூட்டம்

கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பாஜக தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் முரளி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் பாஜக சார்பில் அந்தந்த ஒன்றிய பகுதிகளில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிணத்துக்கடவு மேற்கு ஓன்றிய பாஜக சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

மேற்கு ஒன்றிய தலைவர் மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் முரளி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.



கூட்டத்தில் அவர் பேசியதாவது, அனைத்து கிளைகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்,

வரும் தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாக பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை பாஜக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபால், மகேந்திர பிரபு, பொருளாளர் சிவகுமார், முன்னாள் ஒன்றிய தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...