Fenatic Handball Club சார்பில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்ற கைப்பந்து போட்டியில் கோவை கற்பகம் பல்கலை கழகம் வெற்றிப்பெற்றுள்ளது.
கோவை: கடந்த 3 முதல்4 வரை தென்னிந்தியா அளவிலான கைப்பந்து போட்டி கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் நடைபெற்றது.இதில் 38க்கும் மேற்பட்ட அணிகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து அணிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிFenaticHandball Club சார்பாக கன்னியாகுமரியில் நடத்தப்பட்டது.முதல் காலிறுதிபோட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும் மாரி இன்வரியர்ஸ் கேரளாஅணியும் எதிர்கொண்டது.இதில் 20 - 19 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.
அரை இறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும் பச்சையப்பன் கல்லூரி காஞ்சிபுரம் அணியை எதிர்கொண்டது.இதில் 30-27என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.
இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலை. அணியும் இந்து ஶ்ரீவில்லிபுத்தூர் அணியை எதிர்கொண்டது. இதில் 40-17. என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றியடைந்து கோவைக்கு பெருமை சேர்த்தது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலை. துணை வேந்தர்வெங்கடாஜலபதி பதிவாளர்அவர்களும் பழனிசாமி உடற்கல்வி துறை இயக்குனரும், சுதாகர் பயிற்சியாளர் ராமச்சந்திரன்உள்ளிட்டோர் பாராட்டை தெரிவித்தனர்.