கோவையில் போலீசார் விசாரணைக்கு பயந்து வெள்ளி மோதிரத்தை விழுங்கிய தொடர் கஞ்சா குற்றவாளியால் பரபரப்பு…!

கோவை வடவள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த நபர் பிடிபட்ட நிலையில், போலீசாருக்கு பயந்து வெள்ளி மோதிரத்தை விழுங்கியதை அடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


கோவை: கோவை வடவள்ளி பகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர்.

சோதனையில், அவரிடம் 5 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் தொண்டாமுத்தூர் பார்பர் காலனி பகுதியை சேர்ந்த விஜய் (26) என்பது தெரியவந்தது. மேலும், கடந்த மாதம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் 1,200 கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து சிறை சென்றவர் என்பதும் சிறையில் இருந்து வெளியில் வந்தவர், மீண்டும் கஞ்சா விற்பனை ஈடுபட்டு வந்ததும், சோதனையில் தெரியவந்தது.

இந்த நிலையில், போலீசார் விசாரணைக்கு பயந்து காவல் நிலையத்தில் விஜய், தன் கையில் அணிந்திருந்த வெள்ளி மோதிரத்தை விழுங்கியுள்ளார்.

இதுகுறித்து சக போலீசாரிடம் வயிறு வலிப்பதாக தெரிவித்தும், தான் மோதிரத்தை விழுங்கியது குறித்தும் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, போலீசார் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று வயிற்றை ஸ்கேன் செய்தனர்.

பரிசோதனையில், விஜயின் வயிற்றில் வெள்ளி மோதிரம் இருந்ததை உறுதி செய்த போலீசார், உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர் மூலம் சிகிச்சை கொடுத்து மோதிரத்தை வெளியே எடுத்தனர்.

போலீசார் விசாரணைக்கு பயந்து வெள்ளி மோதிரத்தை விழுங்கிய கைதியால் வடவள்ளி காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...