நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமிய குழந்தைகளுடனான நபி புகழ்பாடும் பேரணி திருப்பூரில் நடைபெற்றது.

திருப்பூர் பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைமையாளர் இமாம் சையது அகமது மிஷபாஹி தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்கள் "அனைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேணவேண்டும்" , அமைதியை காக்கவேண்டும் என கோஷங்களை எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.


திருப்பூர்: இன்று இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளாகும். இத்தினத்தை கொண்டாடும் விதமாக வருடாவருடம் அக்டோபர் 9ம்தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது

இஸ்லாமியர்கள் இத்திருநாளை மிலாடி நபி விழாவாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் திருப்பூரில் மீலாது கமிட்டியின் சார்பில் நபி புகழ் பாடும் பேரணி இன்று நடைபெற்றது.



இப்பேரணியை திருப்பூர் பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைமையாளர் இமாம்.சையது அகமது மிஷபாஹி தொடங்கி வைத்தார். அதிபர் அஜீம்பாஷா நாட்டுமக்கள் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்தும், தொழில்கொடி அசைத்தும் துவக்கி வைத்தார்.

இறை தூதர் நபிகள் நாயகத்தின் சிறப்பு பேரணியில் திருப்பூர் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்கள் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகளின் ஊர்வலமாக வந்தனர்.



பேரணியில் கலந்து கொண்ட சிறுவர்,சிறுமியர்கள் "அனைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேணவேண்டும்" ,அமைதியை காக்கவேண்டும் என கோஷங்களை எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.



இந்த நிகழ்ச்சியில் மீலாது கமிட்டியின் தலைவர் சையது மன்சூர்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனைகள் செய்து குழந்தைகள் சமாதான புறாவை பறக்கவிட்டு இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...