திருப்பூர் பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைமையாளர் இமாம் சையது அகமது மிஷபாஹி தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்கள் "அனைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேணவேண்டும்" , அமைதியை காக்கவேண்டும் என கோஷங்களை எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
திருப்பூர்: இன்று இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளாகும். இத்தினத்தை கொண்டாடும் விதமாக வருடாவருடம் அக்டோபர் 9ம்தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது
இஸ்லாமியர்கள் இத்திருநாளை மிலாடி நபி விழாவாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் திருப்பூரில் மீலாது கமிட்டியின் சார்பில் நபி புகழ் பாடும் பேரணி இன்று நடைபெற்றது.

இப்பேரணியை திருப்பூர் பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைமையாளர் இமாம்.சையது அகமது மிஷபாஹி தொடங்கி வைத்தார். அதிபர் அஜீம்பாஷா நாட்டுமக்கள் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்தும், தொழில்கொடி அசைத்தும் துவக்கி வைத்தார்.
இறை தூதர் நபிகள் நாயகத்தின் சிறப்பு பேரணியில் திருப்பூர் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்கள் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகளின் ஊர்வலமாக வந்தனர்.

பேரணியில் கலந்து கொண்ட சிறுவர்,சிறுமியர்கள் "அனைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேணவேண்டும்" ,அமைதியை காக்கவேண்டும் என கோஷங்களை எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மீலாது கமிட்டியின் தலைவர் சையது மன்சூர்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனைகள் செய்து குழந்தைகள் சமாதான புறாவை பறக்கவிட்டு இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.


இஸ்லாமியர்கள் இத்திருநாளை மிலாடி நபி விழாவாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் திருப்பூரில் மீலாது கமிட்டியின் சார்பில் நபி புகழ் பாடும் பேரணி இன்று நடைபெற்றது.
இப்பேரணியை திருப்பூர் பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைமையாளர் இமாம்.சையது அகமது மிஷபாஹி தொடங்கி வைத்தார். அதிபர் அஜீம்பாஷா நாட்டுமக்கள் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்தும், தொழில்கொடி அசைத்தும் துவக்கி வைத்தார்.
இறை தூதர் நபிகள் நாயகத்தின் சிறப்பு பேரணியில் திருப்பூர் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்கள் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகளின் ஊர்வலமாக வந்தனர்.
பேரணியில் கலந்து கொண்ட சிறுவர்,சிறுமியர்கள் "அனைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேணவேண்டும்" ,அமைதியை காக்கவேண்டும் என கோஷங்களை எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மீலாது கமிட்டியின் தலைவர் சையது மன்சூர்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனைகள் செய்து குழந்தைகள் சமாதான புறாவை பறக்கவிட்டு இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.