தனியார் அமைப்புகளுக்கு அரசு பள்ளியில் பயிற்சி அளிக்க அனுமதி இல்லை எனவும், சம்பவம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி ஆரம்பப்பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி நடத்தியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார். இதனிடையே, இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் தேவாங்க பள்ளி சாலையில், கோவைமாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி வளாகத்தில், இன்று காலைஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் காக்கி கால் சட்டை அணிந்து பயிற்சி மேற்கொண்டனர்.
அரசு பள்ளி வளாகங்களில் இது போன்ற தனியார் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்ற நிலையில், மாநகராட்சி பள்ளி வளாகத்திலேயே ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடப்பது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறுகையில், கோவை மாநகராட்சி பள்ளி வளாகங்களில் எந்த நிகழ்ச்சிகளும்நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை எனவும், பள்ளி வளாகத்தில் பயிற்சி நடைபெறுவது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பயிற்சி செய்யஅனுமதித்தது குறித்து தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி மேற்கொண்ட தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் அங்கு சென்றபோது அவர்கள் பயிற்சியை முடித்துவிட்டு பள்ளியின் கேட்டை பூட்டி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மாநகராட்சி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து இன்றுபிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.
ஆர் எஸ் எஸ் மூலமாக வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் சேவா தினத்தை முன்னிட்டு மாநகராட்சி பள்ளியில் இருந்த குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றும் வேலையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஈடுபட்டதை திரித்து ஷாக்கா நடைபெற்றதாக தவறான குற்றச்சாட்டை தீக்காவினர் அரசியல் லாபத்திற்காக மேற்கொண்டுள்ளதாக தகவல்.... கோவை முழுவதும் இன்று 23 இடங்களில் இப்படிப்பட்ட சேவா நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
கோவை ஆர்.எஸ்.புரம் தேவாங்க பள்ளி சாலையில், கோவைமாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி வளாகத்தில், இன்று காலைஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் காக்கி கால் சட்டை அணிந்து பயிற்சி மேற்கொண்டனர்.
அரசு பள்ளி வளாகங்களில் இது போன்ற தனியார் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்ற நிலையில், மாநகராட்சி பள்ளி வளாகத்திலேயே ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடப்பது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறுகையில், கோவை மாநகராட்சி பள்ளி வளாகங்களில் எந்த நிகழ்ச்சிகளும்நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை எனவும், பள்ளி வளாகத்தில் பயிற்சி நடைபெறுவது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பயிற்சி செய்யஅனுமதித்தது குறித்து தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி மேற்கொண்ட தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் அங்கு சென்றபோது அவர்கள் பயிற்சியை முடித்துவிட்டு பள்ளியின் கேட்டை பூட்டி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மாநகராட்சி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து இன்றுபிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.
ஆர் எஸ் எஸ் மூலமாக வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் சேவா தினத்தை முன்னிட்டு மாநகராட்சி பள்ளியில் இருந்த குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றும் வேலையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஈடுபட்டதை திரித்து ஷாக்கா நடைபெற்றதாக தவறான குற்றச்சாட்டை தீக்காவினர் அரசியல் லாபத்திற்காக மேற்கொண்டுள்ளதாக தகவல்.... கோவை முழுவதும் இன்று 23 இடங்களில் இப்படிப்பட்ட சேவா நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது