பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்ட தினத்தையொட்டி, நேற்றைய தினம் ஆழியார் அணை முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவு முழுவதும் ஜொலித்தது, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
கோவை: கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சியை போக்கவும், அப்பகுதி மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும், பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்டம் (பிஏபி) கொண்டு வரப்பட்டது.
1961 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அப்போதய தமிழகம், கேரளா என இரு மாநில அரசுகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்டத்தில் மேல் நீராறு, கீழ்நீராறு, சோலையார், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிபள்ளம், ஆழியாறு, திருமூர்த்தி மற்றும் அப்பர் ஆழியார், உப்பார் உள்ளிட்ட அணைகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ளன. இதில், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் அணை பெரும் பங்கு வகுக்கிறது.

இந்நிலையில், இதை நினைவு கூறும் வகையில் தமிழக அரசின் சார்பில் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்டத்தின் முக்கிய அணையான 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணையின் 11 கண் மதகுகள் மற்றும் அணை முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முழுவதும் மின் ஒளியில் ஜொலித்தது.

இதில் குறிப்பாக எட்டு மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு மின் ஒளியில் நீர் வெளியேற்றப்பட்டது.

இது அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

1961 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அப்போதய தமிழகம், கேரளா என இரு மாநில அரசுகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்டத்தில் மேல் நீராறு, கீழ்நீராறு, சோலையார், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிபள்ளம், ஆழியாறு, திருமூர்த்தி மற்றும் அப்பர் ஆழியார், உப்பார் உள்ளிட்ட அணைகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ளன. இதில், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் அணை பெரும் பங்கு வகுக்கிறது.
இந்நிலையில், இதை நினைவு கூறும் வகையில் தமிழக அரசின் சார்பில் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்டத்தின் முக்கிய அணையான 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணையின் 11 கண் மதகுகள் மற்றும் அணை முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முழுவதும் மின் ஒளியில் ஜொலித்தது.
இதில் குறிப்பாக எட்டு மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு மின் ஒளியில் நீர் வெளியேற்றப்பட்டது.
இது அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.