கோவையில் பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்ட தினம்: வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்த ஆழியார் அணை

பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்ட தினத்தையொட்டி, நேற்றைய தினம் ஆழியார் அணை முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவு முழுவதும் ஜொலித்தது, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.


கோவை: கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சியை போக்கவும், அப்பகுதி மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும், பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்டம் (பிஏபி) கொண்டு வரப்பட்டது.

1961 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அப்போதய தமிழகம், கேரளா என இரு மாநில அரசுகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்டத்தில் மேல் நீராறு, கீழ்நீராறு, சோலையார், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிபள்ளம், ஆழியாறு, திருமூர்த்தி மற்றும் அப்பர் ஆழியார், உப்பார் உள்ளிட்ட அணைகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ளன. இதில், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் அணை பெரும் பங்கு வகுக்கிறது.



இந்நிலையில், இதை நினைவு கூறும் வகையில் தமிழக அரசின் சார்பில் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.



இதன் ஒரு பகுதியாக பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்டத்தின் முக்கிய அணையான 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணையின் 11 கண் மதகுகள் மற்றும் அணை முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முழுவதும் மின் ஒளியில் ஜொலித்தது.



இதில் குறிப்பாக எட்டு மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு மின் ஒளியில் நீர் வெளியேற்றப்பட்டது.



இது அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...