பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பிரஸ் காலனி பகுதியில் போலி 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்த விருதுநகரை சேர்ந்த காளிமுத்து, நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமார், மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 கோவில் கலசங்கள், லேப்டாப் மற்றும் 4 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள பிரஸ் காலனி குடியிருப்பு பகுதியில், சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் அட்டை பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அந்த நோட்டுகள் அனைத்தும், போலி என்பது தெரியவந்ததை தொடர்ந்து, அந்த வீட்டில் இருந்த விருதுநகரை சேர்ந்த காளிமுத்து, நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமார், மோகன்ராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து ஒன்பது அட்டை பெட்டிகளில் இருந்த போலி 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் இரண்டு கோவில் கலசம், லேப்டாப் மற்றும் 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜடகோபால் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் அவர்கள் இரிடியம் இருப்பதாக கூறி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட மோகன்ராஜ், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது உறவினரிடம் பணத்தை இருமடங்காக்கி தருவதாக கூறி 2 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து ரவிச்சந்திரன் மற்றும் அவரது உறவினரும் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேலும் இவர்களால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையின் போது கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் அட்டை பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அந்த நோட்டுகள் அனைத்தும், போலி என்பது தெரியவந்ததை தொடர்ந்து, அந்த வீட்டில் இருந்த விருதுநகரை சேர்ந்த காளிமுத்து, நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமார், மோகன்ராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து ஒன்பது அட்டை பெட்டிகளில் இருந்த போலி 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் இரண்டு கோவில் கலசம், லேப்டாப் மற்றும் 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜடகோபால் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் அவர்கள் இரிடியம் இருப்பதாக கூறி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட மோகன்ராஜ், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது உறவினரிடம் பணத்தை இருமடங்காக்கி தருவதாக கூறி 2 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து ரவிச்சந்திரன் மற்றும் அவரது உறவினரும் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேலும் இவர்களால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.