திருப்பூரில் காப்பகத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் - முதல்வர் நிவாரண தொகையை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்

ஸ்ரீ விவேகானந்தா சேவாலயா குழந்தைகள் காப்பகத்தில் இரவு உணவு அருந்திய மூன்று குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தாருக்கு முதலமைச்சர் அறிவித்தபடி ரூபாய் 2 லட்சத்தை வருவாய் கோட்டாட்சியர் இன்று அவர்கள் குடும்பத்தாரிடம் வழங்கினார்.



திருப்பூர்: நேற்று முன்தினம் திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் என்ற குழந்தை காப்பகத்தில் இரவு உணவு உண்ட 14 குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 11 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதை மற்றும் மெத்த தனமான போக்கால் குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்த காப்பகத்தை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த சிறுவர்களான - ஆதீஷ் (11), மாதேஷ் (14), பாபு (10) ஆகிய 3 மாணவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, முதற்கட்டமாக ஆதீசின் தாயார் பூங்கொடிக்கு இன்று மாலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டரி நாதன் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...