நகராட்சி செய்ய வேண்டிய பணிகளில் தொய்வு: நகர மன்ற உறுப்பினர்கள் மீது தவறான புகார்கள் எழுகின்றன - வால்பாறை நகரமன்ற துணைத் தலைவர்

வால்பாறை நகராட்சியில் பல்வேறு இடங்களில் தெருவிளக்கு அமைக்கும் பணிகள் முடங்கியுள்ளதால், தற்போதுள்ள ஒப்பந்ததாரரை மாற்ற இருமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் மனு அளித்தார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் தெருவிளக்குகள் பணி முடங்கியுள்ளதால், ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரரை நீக்கிவிட்டு புதிய ஒப்பந்ததாரரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதால் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மன்ற துணைத் தலைவர் செந்தில் குமார் மனு அளித்துள்ளார்.

வால்பாறையில் உள்ள நகராட்சியின் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி மற்றும் ஆணையாளர் பாலு ஆகியோருக்கு நகர மன்ற துணைத் தலைவர் தா.மா செந்தில்குமார் கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார்.



அதில், வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 21 வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்குகள், தூய்மை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் உள்ள நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொண்டாலும், நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய அடப்படை பணிகள் சரிவர செயல்படாததால் நகர மன்ற உறுப்பினர்கள் மேல் தவறான புகார்கள் ஏற்படுகிறது.

எனவே, குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்துதல், கூடுதல் தூய்மை பணியாளர்கள் நியமனம், தெருவிளக்கு பணிகள் என மக்களின் அடிப்படை தேவைகளை நகராட்சி செய்து கொடுக்க வேண்டும்.

முக்கியமாக, தெரு விளக்கு அமைக்கும் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது குறித்து இருமுறை நடந்த மன்ற கூட்டங்களில் நடைமுறையில் உள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பழைய தெரு விளக்கு ஒப்பந்தத்தை ரத்து செய்து புதிய ஒப்பந்ததாரரை நியமனம் செய்து தெருவிளக்கு அமைப்பது முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...