கோவை அருகே குடிபோதையில் நாயை கொடூரமாக தாக்கி கொலை செய்த இளைஞர் மீது வழக்குப்பதிவு

வேலாண்டிபாளையம் அருகே சின்னன்னன் செட்டியார் நகரை சேர்ந்த கார்த்தி என்பவர் நாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில், அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: வேலாண்டிபாளையம் அருகே இளைஞர் ஒருவர் குடிபோதையில் நாயின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலாண்டிபாளையம் அருகேயுள்ள சின்னன்னன் செட்டியார் நகரை சேர்ந்த லட்சுமி என்பவர் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.



அதில், சின்னன்னன் செட்டியார் நகரை சேர்ந்த கார்த்தி என்பவர், குடிப்போதையில் தனது வீட்டின் முன்பு, உறங்கி கொண்டிருந்த நாயின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்ததாகவும், இறந்த நாயின் உடலை சாலைப்பகுதிக்கு இழுத்துச் சென்று மீண்டும் கொடூரமாக தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட கார்த்தி என்பவரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அவரது புகாரின் பேரில், நாயை கொடூரமாக தாக்கி கொலை செய்த கார்த்தி என்பவர் மீது, போலீசார், மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...