வேலாண்டிபாளையம் அருகே சின்னன்னன் செட்டியார் நகரை சேர்ந்த கார்த்தி என்பவர் நாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில், அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: வேலாண்டிபாளையம் அருகே இளைஞர் ஒருவர் குடிபோதையில் நாயின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலாண்டிபாளையம் அருகேயுள்ள சின்னன்னன் செட்டியார் நகரை சேர்ந்த லட்சுமி என்பவர் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், சின்னன்னன் செட்டியார் நகரை சேர்ந்த கார்த்தி என்பவர், குடிப்போதையில் தனது வீட்டின் முன்பு, உறங்கி கொண்டிருந்த நாயின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்ததாகவும், இறந்த நாயின் உடலை சாலைப்பகுதிக்கு இழுத்துச் சென்று மீண்டும் கொடூரமாக தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட கார்த்தி என்பவரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அவரது புகாரின் பேரில், நாயை கொடூரமாக தாக்கி கொலை செய்த கார்த்தி என்பவர் மீது, போலீசார், மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாண்டிபாளையம் அருகேயுள்ள சின்னன்னன் செட்டியார் நகரை சேர்ந்த லட்சுமி என்பவர் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், சின்னன்னன் செட்டியார் நகரை சேர்ந்த கார்த்தி என்பவர், குடிப்போதையில் தனது வீட்டின் முன்பு, உறங்கி கொண்டிருந்த நாயின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்ததாகவும், இறந்த நாயின் உடலை சாலைப்பகுதிக்கு இழுத்துச் சென்று மீண்டும் கொடூரமாக தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட கார்த்தி என்பவரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அவரது புகாரின் பேரில், நாயை கொடூரமாக தாக்கி கொலை செய்த கார்த்தி என்பவர் மீது, போலீசார், மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.