கோவை பெரியநாயக்கன்பாளையம் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை - இருவர் கைது

தனிப்படை போலீசாரின் சோதனையில், இடிகரை பகுதியைச் சேர்ந்த ஜெயமுருகன் மற்றும் மேட்டுப்பாளையம் அடுத்த சேரன் வீதியை சேர்ந்த சிவகாமி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 169 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெ.நா.பாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இடிகரை பகுதியைச் சேர்ந்த ஜெயமுருகன் (35) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து, 102 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், மேட்டுப்பாளையம் பகுதியில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த சேரன் வீதியைச் சேர்ந்த பாபுராஜ் என்பவரின் மனைவி சிவகாமியை (49) கைது செய்தனர். அவரிடமிருந்தும் 67 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் உள்பட மொத்தம் 169 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை 94981-81212 என்ற தொலைபேசி எண்ணிலும், வாட்ஸ்அப்பில் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்கலாம், என காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...