கோவைக்கு வந்துள்ள நீதியரசர் முனைவர் ப.ஜோதிமணி தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுவினர் ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகேயுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை: திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநிலக் கண்காணிப்புக் குழுவினர் தமிழகம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மை குறித்து பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, நேற்று கோவை வந்துள்ள கண்காணிப்பு குழுவின், தலைவர் நீதியரசர் முனைவர். ப. ஜோதிமணி தலைமையிலான குழுவினர் கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகேயுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் (Micro Composting Centre) செயல்பாடுகள் குறித்து கண்காணிப்பு குழுவின் தலைவர்நீதியரசர் ப.ஜோதிமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷாமிளா, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி, நகர் நல அலுவலர் மரு.பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் மண்டல சுகாதார அலுவலா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


அதன் ஒரு பகுதியாக, நேற்று கோவை வந்துள்ள கண்காணிப்பு குழுவின், தலைவர் நீதியரசர் முனைவர். ப. ஜோதிமணி தலைமையிலான குழுவினர் கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகேயுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் (Micro Composting Centre) செயல்பாடுகள் குறித்து கண்காணிப்பு குழுவின் தலைவர்நீதியரசர் ப.ஜோதிமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷாமிளா, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி, நகர் நல அலுவலர் மரு.பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் மண்டல சுகாதார அலுவலா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.