கோவை ஒண்டிப்புதூர்‌ நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தில் திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநிலக் கண்காணிப்பு குழு தலைவர் ஆய்வு

கோவைக்கு வந்துள்ள நீதியரசர் முனைவர் ப.ஜோதிமணி தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுவினர் ஒண்டிப்புதூர்‌ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகேயுள்ள நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநிலக் கண்காணிப்புக் குழுவினர் தமிழகம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மை குறித்து பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, நேற்று கோவை வந்துள்ள கண்காணிப்பு குழுவின், தலைவர் நீதியரசர் முனைவர். ப. ஜோதிமணி தலைமையிலான குழுவினர் கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.



இந்நிலையில், இன்று கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட ஒண்டிப்புதூர்‌ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகேயுள்ள நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தின்‌ (Micro Composting Centre) செயல்பாடுகள்‌ குறித்து கண்காணிப்பு குழுவின் தலைவர்நீதியரசர்‌ ப.ஜோதிமணி நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்த ஆய்வின் போது, கோவை மாநகர மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப், மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா, கிழக்கு மண்டல தலைவர்‌ இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்‌, மாமன்ற உறுப்பினர்‌ சாந்தாமணி, நகர்‌ நல அலுவலர்‌ மரு.பிரதீப்‌ வாசுதேவன்‌ கிருஷ்ணகுமார்‌ மண்டல சுகாதார அலுவலா்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்‌.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...