வால்பாறை நகராட்சியை கண்டித்து ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் செய்து கொடுக்கப்பட்ட பணிகளுக்கான தொகை இன்னும் வரவில்லை என்று குற்றம்சாட்டி வால்பாறை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்ததாரர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சுமார் 50 மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் நகராட்சி வேலைகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டில், நகராட்சியில் பல்வேறு வேலைகளுக்கு ஒப்பந்தம் புள்ளிகள் பெற்று வேலைகளை செய்து முடித்தும் அதற்கான ஒப்பந்த தொகையான பல லட்சம் ரூபாய் இது நாள் வரை கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், 2020-ம் ஆண்டில் அப்போதய ஆணையாளர் பல கோடி ரூபாய் மோசடி செய்தார் என்ற காரணத்தை கூறி எங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை வழங்காமல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.



ஒப்பந்த பணிகளுக்கான தொகையை இன்னும் கொடுக்காததால் ஏராளமான ஒப்பந்ததாரர்கள் இன்று பட்டினியால் அவதிப்படுவதாகவும், இது குறித்து அரசிற்கு பல முறை மனுக்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...