திருப்பூர் காப்பகத்தில் மூன்று குழந்தைகள் பலியான சம்பவம்: செய்தித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உடல் நிலை குறைவுக்கு உண்மையான காரணம் தெரியவரும் என்று செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலை திருமுருகன்பூண்டி ரிங்ரோட்டில் விவேகானந்தா சேவாலயம் என்ற குழந்தைகள் காப்பகத்தில் நேற்று இரவு உணவிற்கு பின்னர் மூன்று மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 11 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தற்போது சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை திருப்பூர் அரசு மருத்துவமனையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சந்தித்துஅவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தது, சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசியஅமைச்சர் மு.பெ.சாமிநாதன், சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றிருந்தால் 3 பேரின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம். சிகிச்சையில் உள்ள 4 மாணவர்களுக்கு மட்டும் இன்னும் காய்ச்சல் குறையாத நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எஞ்சிய சிறுவர்கள் நல்லமுறையில் வீட்டுக்கு செல்லக்கூடிய நிலையில் உள்ளனர்.

உயிரிழந்த 3 சிறுவர்களின் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் தான், உணவில் ஏற்பட்ட கோளாறா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என்பது தெரியவரும். உணவில் தான் பிரச்சினை என அனுமானத்தின் மூலம் முதல் கட்டமாக தெரியவருகிறது.

சம்பவம் குறித்து விசாரிக்கசமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை முதல்வர் அனுப்பி உள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...