கிணத்துக்கடவு பகுதியில் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில், சோதனை மேற்கொண்டனர். புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்தனர்.
கோவை: கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை மீது வழக்கு பதிவு செய்தனர்.
கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கிணத்துக்கடவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் மளிகை கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டார். சோதனையில், சிங்கராம்பாளையம் பகுதியில் செல்வராஜ் வயது (50) என்பவரது மளிகை கடையில் சட்ட விரோதமாக பதுக்கி விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதே போல் வடபுதூரில் உள்ள ஜேம்ஸ் செல்வன் (40) என்பவரது மளிகை கடையில் போலீசார் சோதனை நடத்தியதில் அங்கு சட்ட விரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட் வைத்திருந்த இருவர் மீதும் கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.