வார்டு எண் 60: ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்‌ ரூ.22 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ ஆய்வகத்தை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

உப்பிலிபாளையம் கூட்டுறவு நகரில் இன்று ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் மு.பிரதாப் பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்க தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாநகர ஆணையாளர் மு. பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் வார்டு எண்.60க்கு உட்பட்ட உப்பிலிபாளையம்‌ கூட்டுறவு நகரில்‌ தூய்மைப் பணியாளாகள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவது தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனையடுத்து, அப்பகுதி மக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்‌ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.



பின்னர்‌, அப்பகுதியிலுள்ள மழைநீர்‌ வடிகால்களில்‌ எண்ணை பந்துகளை கொண்டு டெங்கு கொசுக்கள்‌ உற்பத்தியவதை தடுக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை நேரில்‌ ஆய்வு செய்து, பொதுமக்களிடம்‌ குடிநீர் விநியோகம்‌ குறித்து கேட்டறிந்தார்‌.



அதனைத் தொடர்ந்து, உப்பிலிபாளையம்‌, கூட்டுறவு நகரில்‌ உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்‌ ரூ.22 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டுவரும்‌ ஆய்வகத்தை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டுமான பணியினை தரமானதாகவும்‌, விரைவாகவும்‌ முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ முத்துராமலிங்கம்‌, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தரராஜன்‌, சுகாதார அலுவலர்‌ முருகா மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...