உப்பிலிபாளையம் கூட்டுறவு நகரில் இன்று ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் மு.பிரதாப் பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்க தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாநகர ஆணையாளர் மு. பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் வார்டு எண்.60க்கு உட்பட்ட உப்பிலிபாளையம் கூட்டுறவு நகரில் தூய்மைப் பணியாளாகள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனையடுத்து, அப்பகுதி மக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர், அப்பகுதியிலுள்ள மழைநீர் வடிகால்களில் எண்ணை பந்துகளை கொண்டு டெங்கு கொசுக்கள் உற்பத்தியவதை தடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, உப்பிலிபாளையம், கூட்டுறவு நகரில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஆய்வகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டுமான பணியினை தரமானதாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல உதவி ஆணையர் முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தரராஜன், சுகாதார அலுவலர் முருகா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் வார்டு எண்.60க்கு உட்பட்ட உப்பிலிபாளையம் கூட்டுறவு நகரில் தூய்மைப் பணியாளாகள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனையடுத்து, அப்பகுதி மக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர், அப்பகுதியிலுள்ள மழைநீர் வடிகால்களில் எண்ணை பந்துகளை கொண்டு டெங்கு கொசுக்கள் உற்பத்தியவதை தடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, உப்பிலிபாளையம், கூட்டுறவு நகரில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஆய்வகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டுமான பணியினை தரமானதாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல உதவி ஆணையர் முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தரராஜன், சுகாதார அலுவலர் முருகா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.