பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மாட்டிறைச்சி கடையை மூட வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த மூவர், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட நிலையில், கடை உரிமையாளரின் புகாரின் பேரில் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே மதுபோதையில் மாட்டிறைச்சி கடையை மூடச்சொல்லி தகராறில் ஈடுபட்ட, இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனி, பி.எஸ்.ஜி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் முகமது சிக்கந்தர்(32). இவர் அதே பகுதியில் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், சிறிது நேரம் கழித்து முகமது சிக்கந்தர் சாப்பிடுவதற்காக பிற்பகலில் வீட்டிற்கு சென்றுள்ளார். கடையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞர் மட்டும் கடையை கவனித்து வந்துள்ளார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க 3 பேர் கடைக்கு வந்து, கடையில் இருந்த இளைஞரிடம், ஏன் கடையை திறந்து வைத்துள்ளாய்..? கடையை மூடி விட்டு வீட்டிற்கு செல் என்று மிரட்டும் தோணியில் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கடையின் ஷட்டரை பிடித்து கீழே இழுத்துள்ளனர். இதனால் பயந்து போன அந்த இளைஞர், கடையில் இருந்து வெளியில் ஓடி வந்து, கடையின் உரிமையாளரான முகமது சிக்கந்தருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முகமது சிக்கந்தர் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு வந்த போலீசார், தகராறில் ஈடுபட்ட 3 பேரையும் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், மாட்டு இறைச்சி கடையை மூட சொல்லி தகராறு செய்தது இந்து முன்னணி பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பொது செயலாளர் சண்முகம்(40), ஜோதிபுரம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வினோத்(32), ஜோதிபுரம் ஒன்றிய தலைவர் முருகன்(48) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் நேற்று மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில், மாட்டு இறைச்சி கடையில் இருந்த வாலிபரிடம் தகராறில் ஈடுபட்டு கடையை மூட சொல்லியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மது போதையில் மாட்டு இறைச்சி கடையை மூடச் சொல்லி தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனி, பி.எஸ்.ஜி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் முகமது சிக்கந்தர்(32). இவர் அதே பகுதியில் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், சிறிது நேரம் கழித்து முகமது சிக்கந்தர் சாப்பிடுவதற்காக பிற்பகலில் வீட்டிற்கு சென்றுள்ளார். கடையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞர் மட்டும் கடையை கவனித்து வந்துள்ளார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க 3 பேர் கடைக்கு வந்து, கடையில் இருந்த இளைஞரிடம், ஏன் கடையை திறந்து வைத்துள்ளாய்..? கடையை மூடி விட்டு வீட்டிற்கு செல் என்று மிரட்டும் தோணியில் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கடையின் ஷட்டரை பிடித்து கீழே இழுத்துள்ளனர். இதனால் பயந்து போன அந்த இளைஞர், கடையில் இருந்து வெளியில் ஓடி வந்து, கடையின் உரிமையாளரான முகமது சிக்கந்தருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முகமது சிக்கந்தர் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு வந்த போலீசார், தகராறில் ஈடுபட்ட 3 பேரையும் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், மாட்டு இறைச்சி கடையை மூட சொல்லி தகராறு செய்தது இந்து முன்னணி பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பொது செயலாளர் சண்முகம்(40), ஜோதிபுரம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வினோத்(32), ஜோதிபுரம் ஒன்றிய தலைவர் முருகன்(48) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் நேற்று மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில், மாட்டு இறைச்சி கடையில் இருந்த வாலிபரிடம் தகராறில் ஈடுபட்டு கடையை மூட சொல்லியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மது போதையில் மாட்டு இறைச்சி கடையை மூடச் சொல்லி தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.