பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பசுமை வீடு வேண்டி குறை தீர்ப்பு நாளன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்று, வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவை: கோவை பாப்பம்பட்டி பகுதியில் வசிப்பவர் தீபக். பீகாரை சேர்ந்த இவர் 12 ஆண்டுகளுக்கு முன் பாப்பம்பட்டிக்கு வந்துள்ளார். பின்னர், அதேபகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் பசுமை வீடு வாங்க இவர்கள் முயன்று வந்துள்ளனர். இது குறித்து ஆட்சியர் அலுவலகத்துக்கு,குறைதீர் முகாமிற்கு வந்த சரண்யாவீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், சரண்யாவின் கணவர் மற்றும்குடும்பத்தார் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பசுமை வீடு வாங்க இவர்கள் முயன்று வந்துள்ளனர். இது குறித்து ஆட்சியர் அலுவலகத்துக்கு,குறைதீர் முகாமிற்கு வந்த சரண்யாவீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், சரண்யாவின் கணவர் மற்றும்குடும்பத்தார் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.