கோவை விமான நிலையத்தில் 5.7 கிலோ தங்கம் பறிமுதல்; இருவர் கைது

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு தங்கம் கடத்தி வந்த இரு வேறு நபர்களை கோவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனை செய்ததில், 5.7 கிலோ தங்க ஆபரணங்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. நகைகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.


கோவை: வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் நூதன முறையில் தங்கம் கடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், விமான நிலையங்களில் கடைபிடிக்கப்படும் தீவிர கண்காணிப்பு

நடவடிக்கைகளினால் தங்கம் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வரும் நபர்கள் கையும் களவுமாக பிடிபட்டும் வருகின்றனர்.

இதே போன்ற ஒரு சம்பவத்தில் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு தங்கம் கடத்தி வந்த இரு நபர்கள் விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5.7 கிலோ தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த 6 பயணிகளை கோவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது செயின்கள் மற்றும் வளையல்களை பேண்ட் பாக்கெட்டுகளில் கடத்தி வந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த முகமது அப்சல்

(32) என்ற பயணி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கின்கீழ் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே போன்று, திருச்சியைச் சேர்ந்த மற்றொரு பயணி கிருஷ்ணன் (வயது 66), இவரிடம் இருந்துகைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 50 லட்சத்துக்கும் அதிகமாகவும் ஒரு கோடிக்கும் குறைவாகவும் இருப்பதனால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

எஞ்சிய நான்கு பயணிகளும் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...