கோவை விமான நிலையத்தில் 5.7 கிலோ தங்கம் பறிமுதல்; இருவர் கைது

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு தங்கம் கடத்தி வந்த இரு வேறு நபர்களை கோவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனை செய்ததில், 5.7 கிலோ தங்க ஆபரணங்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. நகைகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.


கோவை: வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் நூதன முறையில் தங்கம் கடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், விமான நிலையங்களில் கடைபிடிக்கப்படும் தீவிர கண்காணிப்பு

நடவடிக்கைகளினால் தங்கம் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வரும் நபர்கள் கையும் களவுமாக பிடிபட்டும் வருகின்றனர்.

இதே போன்ற ஒரு சம்பவத்தில் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு தங்கம் கடத்தி வந்த இரு நபர்கள் விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5.7 கிலோ தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த 6 பயணிகளை கோவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது செயின்கள் மற்றும் வளையல்களை பேண்ட் பாக்கெட்டுகளில் கடத்தி வந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த முகமது அப்சல்

(32) என்ற பயணி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கின்கீழ் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே போன்று, திருச்சியைச் சேர்ந்த மற்றொரு பயணி கிருஷ்ணன் (வயது 66), இவரிடம் இருந்துகைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 50 லட்சத்துக்கும் அதிகமாகவும் ஒரு கோடிக்கும் குறைவாகவும் இருப்பதனால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

எஞ்சிய நான்கு பயணிகளும் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...