பொள்ளாச்சி அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் போக்சோவில் கைது

பொள்ளாச்சி அருகே குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு எதிராக பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்த நிலையில், போலீசார் நடவடிக்கை.


கோவை: பொள்ளாச்சி அருகே 13 வயதுக்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் உள்ள பள்ளிகளில் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றது.

இதில் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுமி ஒருவர் தனக்கு ஒன்றரை வருடத்துக்கு முன்பாக ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளியில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக சிறுமியின் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் பெயரில் சிறுமியின் பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியின் தாய் பணியாற்றி வந்ததோட்டத்தின் உரிமையாளர் பாலகிருஷ்ணன்(43) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலகிருஷ்ணனை கைது செய்த மகளிர் போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் போக்சாவில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...