பந்தலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தையை மீட்ட வனத்துறை.

அத்திசால் பகுதியில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிய சிறுத்தையை வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி பத்திரமாக மீட்டனர்.


நீலகிரி: பந்தலூர் அருகேயுள்ள அத்திசால் பகுதியில் காபி தோட்டத்தில் இருந்த சுருக்கு கம்பியில் சிக்கி உயிருக்கு போராடியசிறுத்தையைவனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி பத்திரமாக மீட்டனர்.

பந்தலூா் தாலுகா சேரம்பாடி வனச்சரகத்துக்கு உள்பட்டது அத்திச்சால் கிராமம். இந்த பகுதியில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிருக்குப் போராடி வருவதாக வனத்துறையினருக்கு கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சேரம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தையை மீட்க முயன்றனா். ஆனால், சிறுத்தை ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்ததால் சிறுத்தையை மீட்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

இதனையடுத்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மயக்கமடைந்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

பின்னா், காயமடைந்த சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுருக்கு கம்பி வைத்த தோட்ட உரிமையாளா் மாத்யூ (69) தலைமறைவாகி உள்ளதால், உடனிருந்த அவரது உறவினா் அனீஷ் (39) என்பவரை வனத் துறையினா் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...