அத்திசால் பகுதியில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிய சிறுத்தையை வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி பத்திரமாக மீட்டனர்.
நீலகிரி: பந்தலூர் அருகேயுள்ள அத்திசால் பகுதியில் காபி தோட்டத்தில் இருந்த சுருக்கு கம்பியில் சிக்கி உயிருக்கு போராடியசிறுத்தையைவனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி பத்திரமாக மீட்டனர்.
பந்தலூா் தாலுகா சேரம்பாடி வனச்சரகத்துக்கு உள்பட்டது அத்திச்சால் கிராமம். இந்த பகுதியில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிருக்குப் போராடி வருவதாக வனத்துறையினருக்கு கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சேரம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தையை மீட்க முயன்றனா். ஆனால், சிறுத்தை ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்ததால் சிறுத்தையை மீட்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.
இதனையடுத்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மயக்கமடைந்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பின்னா், காயமடைந்த சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுருக்கு கம்பி வைத்த தோட்ட உரிமையாளா் மாத்யூ (69) தலைமறைவாகி உள்ளதால், உடனிருந்த அவரது உறவினா் அனீஷ் (39) என்பவரை வனத் துறையினா் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.
பந்தலூா் தாலுகா சேரம்பாடி வனச்சரகத்துக்கு உள்பட்டது அத்திச்சால் கிராமம். இந்த பகுதியில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிருக்குப் போராடி வருவதாக வனத்துறையினருக்கு கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சேரம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தையை மீட்க முயன்றனா். ஆனால், சிறுத்தை ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்ததால் சிறுத்தையை மீட்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.
இதனையடுத்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மயக்கமடைந்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பின்னா், காயமடைந்த சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுருக்கு கம்பி வைத்த தோட்ட உரிமையாளா் மாத்யூ (69) தலைமறைவாகி உள்ளதால், உடனிருந்த அவரது உறவினா் அனீஷ் (39) என்பவரை வனத் துறையினா் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.