தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி குத்த பிப். 6ம் தேதி முதல் சிறப்பு முகாம் துவக்கம்


குழந்தைகளுக்கு 10-வது மாதம் தட்டம்மை தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது. தற்போது தட்டம்மை தடுப்பூசிக்கு பதிலாக தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக வரும் பிப்ரவரி 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமினை சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகள் இணைந்து நடத்தவுள்ளன.

6 வயது முதல் 15 வயது வரை உள்ள பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அனைத்து அரசு, அரசு உதவிபெரும் மற்றும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படவுள்ளது. 9 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் பள்ளி செல்லாத பிற குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படவுள்ளது.

இந்த தடுப்பூசி முகாமானது கோவை மாவட்டம் முழுவதும் ஊரகப்பகுதிகளிலும், மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் 7 லட்சத்து 51 ஆயிரத்து 431, 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். 1996 முகாம்கள் பள்ளிகளிலும், 958 முகாம்கள் ஊட்டச்சத்து மையங்களிலும் நடைபெறவுள்ளது.

இந்த முகாமினை கோவை மாவட்ட மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...