திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு..!

நில எல்லை பிரச்சினையில் பக்கத்து நில உரிமையாளர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பத் என்ற விவசாயி தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற நிலையில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.



திருப்பூர்: நில எல்லை பிரச்சினையில் பக்கத்து நில உரிமையாளர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சம்பத். இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலத்திலேயே, தனது மனைவி மற்றும் மகனுடன் தங்கி விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரது தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள நல்லசாமி என்பவர் தோட்டத்திற்கும் இடையே எல்லை சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனிடையே கடந்த 27 ஆம் தேதி வழக்கம் போல் இரவு தண்ணீர் மோட்டாரை நிறுத்திவிட்டு சம்பத் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நல்லசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பத்தின் தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை அகற்றிவிட்டு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து நல்லசாமியிடம் கேட்ட போது, ஜேசிபி வாகனத்தை வைத்து கொலை செய்து விடுவேன் எனவும், தகாத வார்த்தையால் பேசி மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மன உளைச்சலுக்கு ஆளான சம்பத் தனது மனைவி மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்களிக்க முயன்றார்.



அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.



இதனை தொடர்து மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...