திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு..!

நில எல்லை பிரச்சினையில் பக்கத்து நில உரிமையாளர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பத் என்ற விவசாயி தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற நிலையில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.



திருப்பூர்: நில எல்லை பிரச்சினையில் பக்கத்து நில உரிமையாளர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சம்பத். இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலத்திலேயே, தனது மனைவி மற்றும் மகனுடன் தங்கி விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரது தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள நல்லசாமி என்பவர் தோட்டத்திற்கும் இடையே எல்லை சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனிடையே கடந்த 27 ஆம் தேதி வழக்கம் போல் இரவு தண்ணீர் மோட்டாரை நிறுத்திவிட்டு சம்பத் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நல்லசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பத்தின் தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை அகற்றிவிட்டு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து நல்லசாமியிடம் கேட்ட போது, ஜேசிபி வாகனத்தை வைத்து கொலை செய்து விடுவேன் எனவும், தகாத வார்த்தையால் பேசி மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மன உளைச்சலுக்கு ஆளான சம்பத் தனது மனைவி மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்களிக்க முயன்றார்.



அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.



இதனை தொடர்து மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...