மசக்காளிபாளையம் அருகே நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர்களுக்கான மாநில மாநாட்டில், ஊழியர்களுக்கு சட்டப்படியான பணி வரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோவை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என மசக்காளிபாளையம் அருகே நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மசக்காளி பாளையம் சாலையில் உள்ள ஹர்சா மஹாலில் டாஸ்மாக் ஊழியர்களுக்கான மாநில மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும்
இந்த மாநாட்டில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 19 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரியும் ஊழியர்களுக்கு சட்டப்படியான பணிவரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சமூக விரோதிகளிடம் இருந்து ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக மசக்காளி பாளையத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரவேற்புக்குழு தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளரும், வரவேற்புக்குழு தலைவைருமான ஏ.ஜான் அந்தோணிராஜ் வரவேற்பு உரையாற்றினார்.
மேலும் இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாநில துணை தலைவர் இ.பொன்முடி, டாஸ்மாக் சம்மேளன தலைவர் கே.பழனிவேலு, பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன், பொருளாளர் ஜி.சதீஸ், சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
நிறைவாக வரவேற்புக்குழு பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். தொடர்ந்து இன்று நடைபெறும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் மற்றும் எதிர்கால இயக்க நடவடிக்கைகள் மாநாட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

மசக்காளி பாளையம் சாலையில் உள்ள ஹர்சா மஹாலில் டாஸ்மாக் ஊழியர்களுக்கான மாநில மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும்
இந்த மாநாட்டில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 19 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரியும் ஊழியர்களுக்கு சட்டப்படியான பணிவரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சமூக விரோதிகளிடம் இருந்து ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக மசக்காளி பாளையத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரவேற்புக்குழு தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளரும், வரவேற்புக்குழு தலைவைருமான ஏ.ஜான் அந்தோணிராஜ் வரவேற்பு உரையாற்றினார்.
மேலும் இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாநில துணை தலைவர் இ.பொன்முடி, டாஸ்மாக் சம்மேளன தலைவர் கே.பழனிவேலு, பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன், பொருளாளர் ஜி.சதீஸ், சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
நிறைவாக வரவேற்புக்குழு பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். தொடர்ந்து இன்று நடைபெறும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் மற்றும் எதிர்கால இயக்க நடவடிக்கைகள் மாநாட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.