கோவை மசக்காளிபாளையத்தில் டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில மாநாடு - பணி வரன்முறை, காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை.

மசக்காளிபாளையம் அருகே நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர்களுக்கான மாநில மாநாட்டில், ஊழியர்களுக்கு சட்டப்படியான பணி வரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


கோவை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என மசக்காளிபாளையம் அருகே நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மசக்காளி பாளையம் சாலையில் உள்ள ஹர்சா மஹாலில் டாஸ்மாக் ஊழியர்களுக்கான மாநில மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும்

இந்த மாநாட்டில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 19 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரியும் ஊழியர்களுக்கு சட்டப்படியான பணிவரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சமூக விரோதிகளிடம் இருந்து ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது.



மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக மசக்காளி பாளையத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரவேற்புக்குழு தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளரும், வரவேற்புக்குழு தலைவைருமான ஏ.ஜான் அந்தோணிராஜ் வரவேற்பு உரையாற்றினார்.

மேலும் இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாநில துணை தலைவர் இ.பொன்முடி, டாஸ்மாக் சம்மேளன தலைவர் கே.பழனிவேலு, பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன், பொருளாளர் ஜி.சதீஸ், சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

நிறைவாக வரவேற்புக்குழு பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். தொடர்ந்து இன்று நடைபெறும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் மற்றும் எதிர்கால இயக்க நடவடிக்கைகள் மாநாட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...