பல்லடம் அருகே பரபரப்பு..! மனைவியை கொன்றுவிட்டு, விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா..? - போலீசார் விசாரணை

பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் பகுதியில் விவசாயி தங்கவேல் என்பவர் அவரது மனைவி புஷ்பாவதியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் கவுண்டம்பாளையம் பகுதியில் விவசாயி தங்கவேலு என்பவர் அவருடைய மனைவி புஷ்பாவதி மற்றும் மகன் மதன்குமாருடன் வசித்து வருகிறார்.

விவசாயம் செய்து வந்த தங்கவேலு, விவசாயத்தை கைவிட்டு விட்டு மதுவுக்கு அடிமையானதாக தெரிகிறது. இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தங்கவேலுவின் மகன் மதன்குமார், தினமும் அதிகாலை 3 மணிக்கு பால் விற்பனைக்காக வெளியே செல்வது வழக்கம். அதே போன்று, இன்றும் பால் விற்பனை செய்ய மதன் குமார் வெளியே சென்ற பின்பு, தங்கவேல் தனது மனைவி புஷ்பாவதியின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பொழுது விடிந்தும், தங்கவேல் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே பார்த்துள்ளனர். அப்போது இருவரும் வீட்டினுள் சடலமாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.



சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார், இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தங்கவேலு தன் மனைவியை கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அப்படியென்றால் எதற்காக கொலை செய்தார்? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‌.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...