கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராக பார்த்திபன் பொறுப்பேற்றுக் கொண்டார்

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு புதிய உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்ட பார்த்திபன் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


கோவை: கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராக பார்த்திபன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராக பணிபுரிந்து வந்த முருகவேல், கூடுதல் துணை

ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார்.

கடந்த 3 மாதங்களாக அவர் வகித்த பதிவுக்கு யாரும் நியமிக்கப்படாததால், இந்த பொறுப்புகளை கூடுதல் துணை ஆணையாளர் முருகவேல் கவனித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு நூண்ணறிவு பிரிவு புதிய உதவி ஆணையாளராக பார்த்திபன் நியமிக்கப்பட்டார். இன்று காலையில், அவர் அதிகாரபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.

நூண்ணறிவு பிரிவின் புதிய உதவி ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்ட பார்த்திபன், இதற்கு முன் கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி) உதவி ஆணையாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநகரில் நடக்கும் முக்கியமான நகர்வுகளை கூர்மையாக கண்காணிக்கும் மிக முக்கிய பணியில் புதிய உதவி ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள பார்த்திபனுக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...