சிங்கப்பூருக்கு தினமும் இரவு 8.55 மணிக்கு புறப்படும் விமானம் சிங்கப்பூர் சென்றவுடன், அங்கிருந்து வியட்நாமுக்கு புறப்பட்டு செல்லும். மறுதினம் வியட்நாமில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வந்தடைந்து, அங்கிருந்து கோவைக்கு இரவு 7.55 மணிக்கு வந்தடையும்.
கோவை: சமீபத்தில் கோவையிலிருந்து கோவாவிற்கு நேரடியாக விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், கோவையிலிருந்து வியட்நாமுக்கு சிங்கப்பூர் வழியாக விமான சேவையை ஸ்கூட் என்ற தனியார் விமான நிறுவனம்அறிமுகப்படுத்தியுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு மட்டுமே தற்போது விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமானம் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், கோவையில் இருந்து வியட்நாம் நாட்டின் ஹோசிமின் நகருக்கு தனியார் நிறுவனம் விமான சேவை தொடங்கியுள்ளது.
சிங்கப்பூருக்கு தினமும் இரவு 8.55 மணிக்கு புறப்படும் விமானம் சிங்கப்பூர் சென்றவுடன், அங்கிருந்து வியட்நாமுக்கு புறப்பட்டு செல்லும். மறுதினம் வியட்நாமில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வந்தடைந்து, அங்கிருந்து கோவைக்கு இரவு 7.55 மணிக்கு வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய விமான சேவை மூலம் கோவை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தொழில் முனைவோர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று விமான பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
