வக்பு பாதுகாப்பு குழு அறக்கட்டளை தலைவர் அஜ்மல் கான் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சென்னை வடக்கு கடற்கரை போலீசார், வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது தேசிய கொடியை அவமதித்தது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: விதிகளை மீறி காரில் தேசிய கொடி, சுழல் விளக்குடன் வலம் வந்த வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது சென்னை வடக்கு கடற்கரை காவல்துறைவழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல், தமிழ்நாட்டின் வக்பு வாரிய தலைவராக இருப்பவர் அப்துல் ரகுமான். இவர், தனது வாகனத்தில் தேசிய கொடி மற்றும் நீல நிற சுழல் விளக்குடன் வலம் வந்ததாக கூறப்படுகிறது. இது சட்டப்படி குற்றமாகும்.
நாட்டின் குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தவிர மற்ற யாரும் சுழல் விளக்கை பயன்படுத்த கூடாது என உத்தரவு உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் இதனை மீறி தேசிய கொடியுடனும், நீல நிற சுழல் விளக்குடன் காரில் பயணித்து வந்துள்ளார்.
இதற்கு எதிராக தமிழ்நாடு வக்பு பாதுகாப்பு குழு அறக்கட்டளை தலைவர் எம்.அஜ்மல் கான் என்பவர், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜ்மல்கான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் காவல்துறையினரை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது. உத்தரவின் அடிப்படையில் சென்னை வடக்கு கடற்கரை போலீசார் வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.
அவர் மீது, தேசிய கொடியை அவமதித்தது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல், தமிழ்நாட்டின் வக்பு வாரிய தலைவராக இருப்பவர் அப்துல் ரகுமான். இவர், தனது வாகனத்தில் தேசிய கொடி மற்றும் நீல நிற சுழல் விளக்குடன் வலம் வந்ததாக கூறப்படுகிறது. இது சட்டப்படி குற்றமாகும்.
நாட்டின் குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தவிர மற்ற யாரும் சுழல் விளக்கை பயன்படுத்த கூடாது என உத்தரவு உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் இதனை மீறி தேசிய கொடியுடனும், நீல நிற சுழல் விளக்குடன் காரில் பயணித்து வந்துள்ளார்.
இதற்கு எதிராக தமிழ்நாடு வக்பு பாதுகாப்பு குழு அறக்கட்டளை தலைவர் எம்.அஜ்மல் கான் என்பவர், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜ்மல்கான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் காவல்துறையினரை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது. உத்தரவின் அடிப்படையில் சென்னை வடக்கு கடற்கரை போலீசார் வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.
அவர் மீது, தேசிய கொடியை அவமதித்தது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.