விதிகளை மீறி காரில் தேசிய கொடி, சுழல் விளக்குடன் வலம் வந்த வக்பு வாரிய தலைவர் மீது வழக்குப்பதிவு.

வக்பு பாதுகாப்பு குழு அறக்கட்டளை தலைவர் அஜ்மல் கான் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சென்னை வடக்கு கடற்கரை போலீசார், வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது தேசிய கொடியை அவமதித்தது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


சென்னை: விதிகளை மீறி காரில் தேசிய கொடி, சுழல் விளக்குடன் வலம் வந்த வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது சென்னை வடக்கு கடற்கரை காவல்துறைவழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல், தமிழ்நாட்டின் வக்பு வாரிய தலைவராக இருப்பவர் அப்துல் ரகுமான். இவர், தனது வாகனத்தில் தேசிய கொடி மற்றும் நீல நிற சுழல் விளக்குடன் வலம் வந்ததாக கூறப்படுகிறது. இது சட்டப்படி குற்றமாகும்.

நாட்டின் குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தவிர மற்ற யாரும் சுழல் விளக்கை பயன்படுத்த கூடாது என உத்தரவு உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் இதனை மீறி தேசிய கொடியுடனும், நீல நிற சுழல் விளக்குடன் காரில் பயணித்து வந்துள்ளார்.

இதற்கு எதிராக தமிழ்நாடு வக்பு பாதுகாப்பு குழு அறக்கட்டளை தலைவர் எம்.அஜ்மல் கான் என்பவர், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜ்மல்கான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் காவல்துறையினரை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது. உத்தரவின் அடிப்படையில் சென்னை வடக்கு கடற்கரை போலீசார் வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

அவர் மீது, தேசிய கொடியை அவமதித்தது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...